Sunday, June 22, 2014

இரத்­தத்தை சுத்­தி­க­ரிக்கும் புளி Benefits of Tamarind - Blood purification

உப்பு, கார­மில்­லாத உணவு எப்­படி பல­ருக்கும் தொண்­டைக்குள் இறங்க மறுக்­குமோ, அப்­ப­டித்தான் புளிப்புச் சுவை இல்­லாத உணவும். இன்னும் சொல்லப் போனால் புளிப்பு சற்றே தூக்­க­லாக இருந்­தால் தான் பல­ருக்கும் முழு­மை­யாக சாப்­பிட்ட திருப்­தியே வரும்.புளி­யி­லி­ருந்து பெரி­தாக நமக்கு சத்­துகள் எதுவும் கிடைப்­ப­தில்லை.



அது சமை­ய­லுக்கு ருசி கூட்­டு­கிற தவிர்க்க முடி­யாத ஒரு பொருள் அவ்­வ­ள­வுதான். வெறும் புளியைக் கரைத்துக் கொதிக்க வைத்து, கொஞ்சம் மிளகு, சீரகம், பூண்டு தட்டிப் போட்டுச் செய்­கிற ரசம் பசி­யோடு இருக்­கிற பல நேரங்­களில் அமிர்­த­மாக ருசிக்கும்.

வெறும் புளித்­தண்­ணீர்தான் ஆனாலும், அதற்கு அப்­ப­டியோர் சுவை. இன்னும் அன்­றாடச் சமை­யலில் சாம்பார், வத்தக் குழம்பு, கூட்டு என பெரும்­பா­லான உண­வு­க­ளுக்கு புளி சேர்த்­தால்தான் ருசியே. நமது சமை­யலைப் பொறுத்த வரை புளிப்புச் சுவைக்கு புளிக்­குத்தான் முத­லிடம். எலு­மிச்சை, மாங்காய் போன்­றவை எல்லாம் அப்­பு­றம்தான்.

புளியில் நிறைய நல்ல அம்­சங்­களும், கொஞ்சம் கெட்ட விட­யங்­களும் உள்­ளன. ஆயுர்­வேத மருத்­து­வத்தில் புளிக்கு முக்­கிய இட­முண்டு. குறிப்­பாக லேகியம் உள்­ளிட்ட அவர்­க­ளது மருந்துத் தயா­ரிப்­பு­களில் புளி சேர்ப்­பார்கள். அப்­போ­துதான் அது கெட்டுப் போகாது. வயிறு சம்­பந்­தப்­பட்ட மருந்­து­க­ளுக்கும் புளி சேர்ப்­ப­துண்டு. புளி மிகச்­சி­றந்த மல­மி­ளக்கி. எனவே, மலச்­சிக்­க­லுக்கும் இது நல்ல மருந்து.

புளிய இலையின் துளிர்­களைக் கொதிக்க வைத்துச் செய்­கிற கஷாயம், மலே­ரியா நோய்க்கு மருந்­தாகப் பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது. புளி­யங்­கொட்­டைக்கும் மருத்­துவக் குணம் உண்டு. கண்­க­ளுக்­கான டிராப்ஸ் தயா­ரிப்பில் புளி­யங்­கொட்டை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதாம். தொண்டைக் கமறல், ஜல­தோ­ஷ­மாக இருக்கும் போது, ரசம் சாப்­பிடச் சொல்­வார்கள்.

நீர்த்த புளிக்­க­ரை­ச­லுடன், மிளகு, சீர­கமும் சேர்ந்து, தொண்டைக் கம­றலை குணப்­ப­டுத்தும். காய்ச்சல், மஞ்சள் காமாலை வந்­த­வர்­க­ளுக்கு புளி சேர்த்த உணவு கொடுப்­பதன் பின்­ன­ணியும் இதுதான்.

புளி மிகச்­சி­றந்த ஆன்ட்டி ஆக்­சிடன்ட்  ரத்­தத்தைச் சுத்­தி­க­ரிக்கக் கூடி­யது. புற்­று­நோய்க்கு எதி­ராகப் போராடக் கூடி­யது. வெளிப்­பூச்­சுக்கும் புளி நல்ல மருந்து. அந்தக் காலங்­களில் இரத்தக் கட்­டுக்கு புளிப்­பற்று போடு­வார்கள். அதே போல தலை­வலி, தோல்புண், வீக்கம் போன்­ற­வற்­றுக்கும் புளியைத் தட­வினால் நிவா­ரணம் தரும். இத்­தனை நல்ல குணங்கள் உள்ள புளியை ஒருவர் ஒரு நாளைக்கு 10 கிராம் அள­வுக்கு மேல் எடுக்கக் கூடாது. அந்த அளவு தாண்­டினால், பேதி ஏற்­படும்.

யாருக்­கெல்லாம் புளி கூடாது?

இதய நோயா­ளிகள் ஆஸ்­பிரின் மாத்­திரை எடுத்துக் கொள்­வதால், அவர்­க­ளுக்கு புளி கூடாது. ஆஸ்­டியோ ஆர்த்­ரைடிஸ் மற்றும் ருமட்­டாயிட் ஆர்த்த­ரைடிஸ் பிரச்சினை உள்­ள­வர்­க­ளுக்கும் புளி வேண்டாம்.

அது அவர்­க­ளது ரத்­தத்தில் உள்ள யூரிக் அமி­லத்தின் அளவை அதி­க­ரிக்கும். அலர்ஜி பிரச்சினை உள்­ள­வர்­களும் புளி அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறி­வு­றுத்­தப்­ப­டு­வார்கள். நீரி­ழிவு நோயா­ளி­களும் புளியை அள­வோடு எடுத்துக் கொள்­வதே நல்­லது. அது குளூக்­கோஸின் அளவை குறைத்து விடும். ரத்­தத்தை சுண்டும் குணம் கொண்­டது புளி என்­பதால் எல்­லோ­ருமே அள­வோடு அதை உபயோகிப்பதே பாதுகாப்பானது என்ன இருக்கிறது?

100 கிராம் புளி விழுதில்
கலோரி 283 கிலோ கலோரி
புரதம் 3.1 கிராம்
கொழுப்பு 0.1 கிராம்
நார்ச்சத்து 5.6 கிராம்
இரும்பு 17 மி.கி.
கல்சியம் 170 மி.கி.

No comments:

Post a Comment