Saturday, December 19, 2015

நாள் முழுவதும் உற்சாகம் தரும் உணவுகள் Health Food

நாம் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வதோடு மாத்திரமின்றி உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் தரும் உணவுகளையும் தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.


சிவப்பரிசி - இது நம் மனதை அமைதியடைய வைத்து, கற்கும் திறனும் ஞாபக சக்தியும் மேம்பட உதவுகிறது. மன திருப்தியையும் நிறைவான தூக்கத்தையும் தரும்.

மீன் - நம்மை சுறுசுறுப்படையச் செய்து முறையான நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. மீனில் உள்ள செலினியம் எனும் தாதுப் பொருள் ஆக்சிஜனேற்றத்துக்கு முக்கியம். ஆக்சிஜனேற்றம் மூளையின் செயல்பாட்டுக்கு உதவும்.

வாழைப்பழம் - தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும். கடின உழைப்பால் ஏற்படும் உடல் சோர்வு உடனடியாக நீங்கி மீண்டும் வேலையை தொடர உதவும்.

இது தவிர, மூளையின் இரத்த நாளங்கள் சேதமடையாமல் காப்பாற்றக்கூடிய வாழையில் நம் உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவைப்படும் வைட்டமின் ‘சி’ சத்து 33 சதவிகிதம் உள்ளது.

முட்டை - இது மூளையில் தகவல்களை சேமிக்கவும், நினைவுக்கு கொண்டு வரவும், கவனத்துடன் இருக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. அசிடைல் கோலின் போதுமான அளவில் இல்லாவிட்டால் கவனக்குறைவையும் ஞாபகமறதியையும் ஏற்படுத்தும்.
வல்லாரைக்கீரை - நினைவாற்றலுக்கு உதவும்.

எள் - மூளையின் செயல்பாட்டுக்கு உதவுவதுடன், சந்தோஷ உணர்வையும் ஏற்படுத்துகிறது. எள்ளில் உள்ள துத்தநாகம் (ணுinஉ) ஞாபகசக்திக்கும் மூளை வளர்ச்சிக்கும் மூளையின் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும்.

Thursday, December 17, 2015

இதோ ஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெற..... Diabetes

சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று சொல்லும் வகையில் இன்று பெரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது இந்த நோய்.


சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, ஊசி இன்றி இந்த முறையில் முயற்சி செய்து பார்ப்போம்.

கொத்தமல்லி - அரை கிலோ, வெந்தயம் - கால் கிலோ என தனித்தனியாக எடுத்து பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

பின்னர், கலந்த பொடியில் 2 கரண்டி பொடியை 2 டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி 3 வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்னர் குடித்து வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது 45 நிமிடம் வேறு எதனையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

தொடர்ந்து இதனை ஒரு மாதம் குடித்து வந்தால் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை பெறலாம்.

உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து குடிப்பதற்கு முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து இதனை சோதனையில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tuesday, December 1, 2015

வாழ்க்கையின் வெற்றிக்கு சில வழிகள் Success

மனிதன் சுகத்தை மட்டுமே விரும்புகின்றான். ஏனெனில் அவனுக்கென ஒரு கஷ்டம் வரும் போது அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனிதன் அங்கலாய்த்துக்கொண்டிருப்பான்.

இயற்கையும் தான் தினமும் வணங்கும் கடவுளும் தன்னை கஷ்டப்படுத்துகிறான் என்பதே எல்லா மனிதர்களினதும் எண்ணமாக உள்ளது. கஷ்டம் வரும் போது ‘இதுவும் கடந்து போகும்’ என்று எண்ணுபவர்களை விட இறைவன் என்னை சோதிக்கின்றான் என்று எண்ணுபவர்களே அதிகம். கஷ்டங்களை அனுபவிக்கும் போது என்ன கொடுமை சரவணா? என்று நொந்துக்கொள்பவர்கள் வளர்ச்சியடையும் போது ஏன் இந்த வளர்ச்சி சரவணா? என்று கேட்பதில்லை.

என்னிடம் இந்த கார் இருக்கின்றது, இந்த அலைபேசி இருக்கின்றது, இப்படியொரு வீடு இருக்கின்றது, இவ்வளவு நகை இருக்கின்றது, நான் அங்கே செல்கின்றேன் இங்கே செல்கின்றேன் என்று பெருமிதம் கொள்பவர்கள்; கஷ்டம் வந்தால் மட்டும் எனக்கு மட்டும்தான் எல்லாம் நடக்கும் என்பார்கள். இதற்கூடாக மனிதன் கஷ்டத்தை ஏற்க மறுக்கின்றான் என்பது புலனாகிறது.

‘நல்லவர்களை கடவுள் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்’ என்ற வசனம் அனைவரினது உள்மனதிலும் இருந்தால் இவ்வாறான அனுபவங்கள் சிறப்பிக்க வைக்குமே தவிற கசப்பிக்காது. பிறந்த நொடியிலிருந்து சந்தோஷமாகவும் வசதி வாய்ப்புடனும் மாத்திரம் வாழ்ந்து செத்து மடிந்தவர்கள் எவரும் கிடையாது. அதேபோல கஷ்டத்தையும் கண்ணீரையும் மாத்திரம் அனுபவித்து வாழ்ந்தவனும் எங்கும் கிடையாது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

மிருகங்களை விட மனிதர்கள் கேவலமானவர்கள் என்று அனைவரும் கூறுவதுண்டு. ஆனால் மனிதனுடன் ஒப்பிடுகையில் மிருகங்கள் எந்தவொரு பாவத்தையும் செய்வதில்லை. ஒரு நாளைக்கு மனிதன் 9 புண்ணியங்களை செய்தால் 90 பாவங்களை செய்கின்றான். பாவங்களை செய்யவேண்டுமா என்று யோசித்து பாருங்கள். அந்த பாவத்தை செய்வதால் நமக்கு நன்மை கிட்டும் என்று எண்ணினால் அது தவறு. ஏனெனில்  நல்லது நடப்பதற்காக பாவம் செய்கின்றோம் என்று எண்ணி அதை செய்தால் அதனால் ஏற்படும் கர்ம வினை ஜென்மம் முடியும் வரை நம்மை தொடரும் என்பதை   அறிந்திருக்கவேண்டும். பிரச்சினைகளை கண்டு சோர்ந்து  விடக்கூடாது.  முயற்சி செய்யுங்கள். உங்களது அனைத்து முயற்சிகளும் தீர்ந்து போகும்பட்சத்தில் கடவுளின் கருணை தொடங்கும். அதற்கு இந்த 7 வழிகளை கடைபிடியுங்கள்

1.    எப்போதும் செயற்றிறனுடன் செயற்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நீங்களே சாட்சி, நீங்களே பொறுப்பு என்று உறுதிகொள்ளுங்கள். எப்போதும் உயிர்ப்புடன் செயற்படுங்கள். இது உங்களை முன்னோக்கி பயணிக்க வைக்க உதவும்.

2.    உங்களது வாழ்க்கையில் நீங்கள் என்னவாக நினைக்கின்றீர்கள் என்று ஒரு முடிவு எடுக்கும் முன்னர் ஒரு திட்டத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். எடுக்கும் முடிவு இறுதியில் சரியானதாக முடியும் என்று நம்பிக்கை வையுங்கள. அப்படி நம்பிக்கை இல்லாவிட்டால் திட்டத்தை மாற்றுங்கள். எப்போதும் தளர்ந்து போகாது திட்டங்களை முன்னெடுங்கள்.

3.    நீங்கள் முதலில் செய்யவேண்டும் என்று நினைக்கும் அல்லது கட்டாயம் செய்யவேண்டும் என்ற விடயத்தை முன்தள்ளிப்போடுங்கள். பின்தள்ளிப்போட்டால் வாழ்க்கை தாழ்வடையும். உதாரணத்துக்கு இன்று ஒரு மணித்தியாலம் தூங்கி எழும்பலாம் என்று நினைத்தாலும் அந்த ஒரு மணித்தியாலத்தில் செய்யவேண்டிய முக்கியமான வேலை பின்தள்ளிப்போகும். அதற்கு இடமளிக்காதீர்கள்.

4.    அனைவரும் வெற்றியடையவேண்டும் என்று எண்ணுங்கள். யாராலும் இந்த வேலையை செய்யமுடியும் என்று எண்ணுங்கள். ஒரு வேலையை அனைவரும் பகிர்ந்து செய்தால் சிறிய நேரத்தில் பெரிய சாதனையை செய்யலாம். யாரையும் ஒதுக்கி வைக்காதீர்கள். கூட்டாக சேர்ந்து முயற்சித்தால் அனுபவமும் அதிகரிக்கும்.

5.    ஒருவிடயத்தை பற்றி மற்றையவர்கள் மத்தியிலோ அல்லது ஒரு தனிநபரிடமோ பேசுவதற்கு முன்னர், எதிரில் இருப்போர் அல்லது இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்று செவிமடுங்கள். செவிமடுத்த பின்னர் உங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்துங்கள். இதன்மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளமுடியும்.

6.    ஒன்றிணையுங்கள். ஒருவரை பற்றி மற்றொருவர் கேலி கூறினாலோ குறை கூறினாலோ காது கொடுக்காதீர்கள். முடிந்தால் தனிப்பட்ட நபர் பற்றி பேசும் போது கதைக்குரியவர் இல்லாதபோது அவரை பற்றி பேச வேண்டாம் என்று கூறுங்கள். முடிந்தளவு நல்லதை நினையுங்கள. முடியாவிடின் உங்களுக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருடனும் ஒன்றாக இருக்க முயற்சியுங்கள்.

7.    உங்களது எண்ணங்களை கூர்மைப்படுத்துங்கள். அனைவரும் சமமானவர்கள் என்று உணருங்கள். ஏழை, பணக்காரன், சாதி, மதம் என்று பார்க்காதீர்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். கேட்காவிடின் அவர் போக்கில் விட்டுவிடுங்கள். வாழ்க்கையை சமநிலையாக பராமரியுங்கள்.

நல்வாழ்க்கைக்கு கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்! அவசியம் படியுங்கள் life


‘வாட்ஸ் அப்’பில் அவ்வப்போது சில தகவல்கள் வைரலாக பரவி அனைவரையும் கவர்வதுண்டு. அந்த வரிசையில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் என்ற ஒரு செய்தி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.

அது இதோ… ”நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதேபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதேபோல், நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்”.

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்….. tips-for-moms-of-teenage-girls




பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்க ளைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண் டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனி மையில் விட்டுச் செல்லாதீர்கள்.

பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்கவேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப்புணர்வைத் தரும்.

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்…..
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம் பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றி யும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக் குக் கற்றுக் கொடுங்கள்.

குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.

குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.

குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்ற வற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.

என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்

உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.

யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியா சத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறை யோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.

உங்கள் கைகளில் தவழும் மொபைல் ஃபோன் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்! Mobile Phone

மொபைல் என்றால் யாருக்குதான் ஆசையில்லை, அதுவும் ஸ்மார்ட் போன் என்றாலே எல்லாரும் ஆசை தான். நம்மில் பலர் பணம் கொடுத்து வாங்கும் போனை சரியாக பயன்படுத்தாமல் வீணாக்கி விடுகின்றோம். நீங்கள் செய்யும் சிறிய தவறுதான் ஆனால் எவ்வளவு நஷ்டம். பலர் போனை துடைத்து வைக்கின்றோமே தவிர அதை எப்படி பயன்படுத்துவது என்று அறிந்து கொள்வதில்லை. முக்கியமாக சார்ஜ் செய்யும் பொழுது செய்யும் சிறிய தவறுகளால் உங்கள் போனை பலி கொடுத்து விடுகின்றீர்கள். சார்ஜ் முடிவதற்குள் போன் முடிந்துவிடுகின்றது.

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய நிறைய நேரம் எடுத்து கொள்ளலாம். உங்களுக்கு மட்டும் இந்த பிரச்சனை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் சற்று ஆறுதல் அடையுங்கள். ஏன் என்றால் உங்களை போல் பலருக்கும் இந்த பிரச்சனை உண்டு. ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தும் பலருக்கு இந்த பிரச்சனை சமீபத்தில் உள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனை வேகமாக ரீசார்ஜ் செய்ய இதோ உங்களுக்கு சில டிப்ஸ்.

இதனால் உங்கள் ஸ்மார்ட் போன் பேட்ரியின் ஆயுளை நீடிக்க முடியாது என்றாலும் வேகமாக சார்ஜ் செய்ய வைக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

யுஎஸ்பி கேபிளை சோதனை செய்யுங்கள்
யுஎஸ்பி கேபிள் நல்ல கேபிளாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. எப்போதும் ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து வரும் கேபிளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. மலிவாக கிடைக்கின்றது என்று வாங்கினால் நஷ்டம்தான்.


சரியான பவர் சப்ளை வேண்டும் 
நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உங்கள் கணினியை பயன்படுத்தி இருந்தால் பவர் வீக்காக இருந்தாலும் சார்ஜ் வேகமாக நடைபெறாது. யுஎஸ்பி கேபிள் சரியாக இல்லையென்றாலும் சார்ஜ் வேகமாக இருக்காது. ப்ளக் மூலம் சார்ஜ் செய்யாமல் வயர்ல்லெஸ் மூலம் சார்ஜ் செய்தாலும் சார்ஜ் செய்ய அதிக நேரம் ஆகும்.


மோசமான அடாப்டர் வேண்டாம்
யுனிவெர்சல் சார்ஜர் அல்லது பிராண்ட் அல்லாத அடாப்டரை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் போடுவதை தவிர்க்கவும். உங்கள் ஸ்மார்ட் போனுக்கான சார்ஜரை அதாவது போன் வாங்கும்போது கூடவே வரும் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏத்தவும். இவ்வாறு செய்வதால் உங்கள் போனுக்கு விரைவாக சார்ஜ் ஏத்த முடியும்.


காலம் கடந்த ஸ்மார்ட்போன் வேண்டாம்
நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் காலங்கடந்த போனாக அதாவது மிகவும் பழையதாக இருந்தால் சார்ஜ் ஆக நேரமாகும். சமீபத்திய போன்கள் டர்போசார்ஜிங் திறன்களை கொண்டு வருகின்றன. உங்கள் போன் சார்ஜர் மெதுவாக சார்ஜ் ஏத்தினால் நீங்கள் டிவைசை மாற்ற வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.


மோசமான பேட்டரி வேண்டாம்
பேட்டரிகளை பற்றிய தொகுப்புகளை போன் தயாரிப்பாளர்கள் வழங்கு கின்றனர். அதை முழுமையாக படித்து உங்கள் பேட்டரி மோசமானது அதாவது ஒரிஜினல் அல்ல என்று அறிந்தால் உடனே மாற்றி விடுங்கள். இப்படி செய்வதால் விரைவில் சார்ஜ் ஏத்த வசதியாக இருக்கும். குறிப்பாக பழைய பாட்டரி சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

சார்ஜர் 
சார்ஜ் ஆகும் பொழுது போனை பயன்படுத்த வேண்டாம் சிலர் போனுக்கு சார்ஜ் ஏத்திக் கொண்டிருக்கும் போதே போனை பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. சார்ஜ் ஏறும் பொழுது போசுவதால் சார்ஜ் மெதுவாக ஏறும் அதோடு உயிருக்கு கூட ஆபத்து வரும் என்று அறிந்திருப்பீர்கள். புரிந்து கொள்ளுங்கள்.


செயலி
பின்னணி பயன்பாடுகளை (Background Applications) அணைத்து வைக்கவும் அதாவது போனில் மெயில். பேஸ்புக், என பல பயன்பாடுகள் இருக்கலாம். அவற்றை அணைக்காமல் சார்ஜ் ஏத்தினாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே சார்ஜ் மெதுவாக ஏறினால் உங்கள் நெட் பயன்பாடுகள் அனைத்து வைக்கப் பட்டுள்ளதா என்று பார்க்கவும். இதை கடமையாக செய்யாமல் உங்கள் போனை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தாலே நன்றாக பழகி விடும்.


செட்டிங்ஸ்
பயன்படுத்தாத அமைப்புகளை (செட்டிங்ஸ்) அணைத்து வைக்கவும். சில நேரங்களில் நீங்கள் உங்கள் போனில் பயன்படுத்தாத செட்டிங்ஸ் அதாவது வை-பை, ப்ளூடூத், போன்ற அமைப்புகளை அணைத்து வைக்காமல் போனை சார்ஜ் செய்தாலும் சார்ஜ் மெதுவாக ஏறும். ஆகவே செட்டிங்ஸ் அணைத்து வைக்க பட்டுள்ளதா என்று பார்த்து சார்ஜ் செய்யவும்.


ஸ்விட்ச் ஆஃப்
சார்ஜ் ஆகும் போது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கவும். ஸ்மார்ட் போன் பேட்டரியை விரைவில் சார்ஜ் செய்ய போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜில் போட வேண்டும். இதை விட சார்ஜை வேகமாக செய்ய நல்ல முறை கிடையாது. இதனால் சார்ஜில் இருக்கும் போது போன் வருவதையும் நாம் அதை எடுத்து பேசுவதையும் தவிர்க்க முடியுமே.


யுஎஸ்பி போர்ட் மோசமாக இருக்கலாம் 
என்ன அதிர்ச்சியாக உள்ளதா. ஆமாம் ஸ்மார்ட்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து பின் சார்ஜ் போட்டால் சார்ஜ் வேகமாக நடக்கும். இதை செய்தும் மெதுவாக ஏறினால் உங்கள் யுஎஸ்பி போர்ட் முடிந்து விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். இந்நிலையில் உங்கள் போனை நல்ல ஸ்மார்ட் போன் ரிப்பேர் செய்யும் கடைக்கு எடுத்து சென்று சரி செய்யவும்.

உங்கள் ஸ்மார்ட்போன்அடிக்கடி அப்டேட் கேட்டு தொல்லை தருகின்றதா? தடுக்கும் வழி Auto-update

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.
தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

குழந்தைகள் முன் பெற்றோர்கள் முத்தமிடலாமா? parents kissing in front of kids

முத்தம் என்பது அன்பை பரிமாற சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவது சரியா? பெற்றோர்களால் வரம்போடு நடக்க முடியுமெனில் குழந்தைகள் முன்னால் முத்தமிடுவதில் தவறில்லை.

முத்தமிடுவது என்பது அன்பை பரிமாறும் ஒரு வழி என்ற அடிப்படை பாடத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இதனால் தங்கள் பெற்றோர், ஒருவருக்கொருவர் எந்தளவிற்கு பாசமும் அன்பும் கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொள்கையில், அவர்கள் உங்களையே உற்று பார்க்கையில், அவர்களையும் முத்தமிட்டு, அவர்களை விரும்புவதைக் கூற மறந்து விடாதீர்கள். இப்படி செய்வதால் அப்பா அம்மாவையும் விரும்புவதால் தான் முத்தமிடுகிறார் என அவர்களுக்கு புரியும்.

ஆரோக்கியமான உறவுமுறை பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த இடமாக விளங்குவது வீடு தான். பெற்றோர் உதட்டோடு உதடு, எளிமையான மற்றும் சுருக்கமான முத்தத்தை பகிர்ந்தால், அது குழந்தைகள் மத்தியில் அன்பை எடுத்துக்காட்டும் வகையில் அமையும். ஆனால் அவர்கள் முன்னிலையில் உங்கள் உதடுகள் தொடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். மேலும் குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் அடிக்கடி முத்தமிட்டே கொண்டிருப்பதும் கூட அவர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதனால் குழந்தைகள் முன்னால் மிகவும் ஆழமான மற்றும் பேரார்வம் கொண்ட முத்தங்களைப் பெற்றோர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அதனால் எளிய முத்தங்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் முத்தமிடாமல் இருக்க பல்வேறு காரணங்கள் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன் ஏன் முத்தமிடக் கூடாது என்பதை இந்த கட்டுரை உங்களுக்கு புரிய வைக்கும்.

அந்தரங்கத்தை இழத்தல்

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் தெய்வீகமானது. ஒரு தம்பதியாக நீங்கள் இருவரும் அந்தரங்கமாக அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தன்னிச்சையாக முத்தமிட்டாலோ அல்லது கட்டிப்பிடித்தாலோ, உங்கள் அந்தரங்கத்தை இழக்கும் உணர்வை நீங்கள் பெறுவீர்கள். குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் முத்தமிடாமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

பாலியல் 
ஒருவரை ஒருவர் முத்தமிடும் தருணத்தில், சில நேரங்களில் பெற்றோர்கள் தங்களது வரம்பை மறந்து சில பாலியல் ரீதியான செயல்களில் இறங்கி விடுவார்கள். அவர்களை தங்கள் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மொத்தமாக மறந்து போவார்கள். இதனால் இதை பார்க்கும் குழந்தைகள் அதனை போல் தங்களுக்குள் செய்து பார்க்க முயற்சிக்கக்கூடும். அதனால் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் முன்னால் முத்தமிட கூடாது. ஆம், இன்றைய காலத்தில், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான கல்வி அவசியமான ஒன்று தான்.


எல்லையை தாண்டுதல்
தங்கள் பெற்றோர் ஒருவரை ஒருவர் அடிக்கடி முத்தமிட்டு கொள்வதை தங்கள் குழந்தைகள் பார்க்கும் போது, யாரை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் முத்தமிட்டு கொள்ளலாம், அதில் எந்த ஒரு தவறும் இல்லை என கற்பனை செய்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தங்கள் எல்லையை தாண்டி விடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் முத்தமிட்டு கொள்ளமால் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.


அன்பைப் பரிமாறும் வேறு விதம்
கணவன் மனைவிக்கு இடையே அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் மட்டுமே ஒரே வழி என நினைத்து விடாதீர்கள். சாதாரணமாக உரையாடி கொண்டிருக்கும் போது ஒருவரின் கைகளை மற்றவர் பற்றிக் கொள்வதும் கூட அன்பை பரிமாறிக் கொள்வதற்கான எளிய வழியாகும். உங்கள் குழந்தைகள் பார்த்தாலும் கூட, உங்கள் துணையின் கைகளை நீண்ட நேரம் கூட பற்றிக் கொள்ளலாம். ஆனால் முத்த விஷயத்தில் அப்படியில்லை. அதனால் தான் குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர் முத்தமிடக்கூடாது என கூறுகிறோம்.


குறிப்பு
அதே போல், தன் கணவன் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட, குழந்தைகள் முன்னிலையில் முத்தமிடுவதற்கு பதிலாக, தன் கணவனுக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறலாம். மீண்டும் கூறுகிறோம், குழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த பள்ளியாக இருப்பது அவர்களின் வீடே. அதனால் தங்களின் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருந்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது பெற்றோரின் முக்கியமான கடமையாகும்

இனிமேலாவது மனிதரை நாயே என்று பேசாமல் இருப்போமா?

நாமெல்லாம் மனிதர்களா? நெஞ்சில் கைவைத்துக் கேளுங்கள்? செய்தி இதுதான் வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சவுதி பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த, தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது.

மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது. வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தைக்கு காயமேதும் ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்றறிவு படைத்த ஒரு மனித ஜென்மம் தன்பிள்ளையை தெருவில் வீசிவிட்டுப் போக ஐந்து அறிவுள்ள இவர் பிள்ளையைக் காப்பாற்றியிருக்கிறார். கல்லிலும், கர்ப்பக்கிரகத்திலும் இல்லைக் கடவுள் இனிமனிதநேயமல்ல இவர்நேயமே எமக்கெல்லாம் தேவை.

பெண்கள் கால்களை ஷேவிங் செய்யும் போது செய்யும் தவறுகள் Mistakes You're Making Shaving Your Legs

 நீங்கள் எத்தனை முறை உங்கள் கால்களை ஷேவ் செய்வீர்கள்? மாதத்திற்கு இருமுறை அல்லது அதற்கு மேல்? ஒருவேளை நீங்கள் மாதத்தில் இருமுறைக்கு மேல் ஷேவ் செய்வீர்கள் என்றால் அதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம். இது இரண்டு காரணங்களால் இருக்கலாம். அதில் ஒன்று அதிகப்படியான முடி வளர்ச்சி, இரண்டு நீங்கள் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறாக கூட இருக்கலாம்.

பெரும்பாலான நேரங்களில் அது இரண்டாவதாகச் சொல்லப்பட்ட காரணமாக இருக்கலாம். ஒரு அழகுக்கலை வல்லுனரின் கருத்துப்படி பெரும்பாலான பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது நிறைய தவறுகளைச் செய்கின்றனர். எனவே உங்களுக்காக ஷேவ் செய்யும் போது நிகழும் இந்த தவறுகள் என்னவாக இருக்கலாம் என சில குறிப்புகளை இங்கே தருகிறோம்.

ஒரு பெண்ணாக அனைவருக்கும் முடிகளற்ற குறைகளற்ற அழகான கால்கள் இருப்பதையே விரும்புவோம். அதனால் நாம் ஷேவ் செய்யும் போது செய்யும் தவறுகள் என்ன என்பதை தெரிந்து அதனைத் தவிர்க்கலாமே? இந்த தவறுகளை தவிர்ப்பதால் உங்கள் முடி வளர்ச்சியைக் குறைத்து சருமத்தை நன்கு பாதுகாப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குளிப்பதற்கு முன்
குளிப்பதற்கு முன் சருமம் கடினமாகவும் வறண்டும் இருப்பதால் ஷேவ் செய்வதை தவிர்க்க வேண்டும். முதலில் சருமத்தை நன்கு நனைத்துவிட்டு அதன் பிறகு முடியை நீக்க முயல வேண்டும். இது பெண்கள் கால்களை ஷேவ் செய்யும் போது பொதுவாகச் செய்யும் தவறு.


சருமச் சுத்தம்
உங்கள் கால் சருமத்தை ஷேவ் செய்யும் முன் சுத்தம் செய்வது அவசியம். இதனால் வறண்ட மற்றும் இறந்த தோல் பகுதிகள் நீக்கப்பட்டு சரும எரிச்சலும் குறைக்கப்படும்.
30-1446190386-2-legs

எதை உபயோகிக்கிறீர்கள்?
சோப்பு உங்கள் சருமத்தை வறட்சியாகவும், அரிப்புடையதாகவும் செய்யும். எனவே சோப்பிற்கு பதிலாக ஷேவிங் கிரீம்களை உபயோகிப்பது அரிப்பைக் குறைத்து நல்ல பலன் தரும்.


ஐயோ, பழைய ரேசரா?
பெண்கள் தங்கள் கால்களை ஷேவ் செய்யும் போது செய்யும் ஒரு பொதுவான விஷயம் பழைய ரேசரை உபயோகிப்பது. ரேசர்கள் காலப் போக்கில் மழுங்கிவிடுவதுடன் நெருக்கமான சேவை தருவதில்லை. மாறாக அவை சரும எரிச்சலையும் தரும் என்பதால் அவற்றை முதலில் தூக்கி எறியுங்கள்.


அழுத்தம் தராதீர்கள்
உங்கள் சருமத்தை காயப்படாமல் பாதுகாப்பது அவசியம். ஷேவ் செய்யும் போது அழுத்தி செய்தால், அது அதிகமான இறந்த தோல் செல்களை எடுப்பதோடு அவை ரேசரில் சிக்கி உராய்வை அதிகரித்து உங்கள் கால்களில் காயத்தை உண்டு பண்ணக்கூடும்.


தவறான கோணத்தில் ஷேவ் செய்வது
ஷேவ் செய்ய உகந்த வழி உங்கள் முடி வளரும் பாங்கில் ஷேவ் செய்வது. அதாவது உங்கள் காலின் கீழ் பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செய்ய வேண்டும். இதனால் உங்கள் முடி வளர்ச்சி குறைவதுடன் மிருதுவான சருமமும் கிடைக்கும்.


ஒரு ரேசர், பல பேர்
வேண்டாங்கஉங்க ரேசரை இன்னொருத்தருக்குக் கொடுக்காதீங்க.. இல்ல அவங்களோடதை நீங்க உபயோகிக்காதீங்க… இது பல பெண்கள் செய்கிற தவறு. ஏனென்றால் இதில் பல நோய்த்தொற்றுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் குடிகொண்டிருக்கும்.


ஷேவிங்கிற்குப் பிறகு கிரீம்
ஷேவிங் செய்வதால் உங்கள் சருமம் வறட்சி அடையும். எனவே ஒரு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பது நல்லது. இது எரிச்சல் மற்றும் சரும வறட்சியைத் தடுக்கும். என்ன சரியா? இனிமேல் கவனமாக ஷேவ்விங் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

--------------------------

நம்மை அறியாமலேயே நாம் அன்றாடம் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!
   

நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம். நாம் மேற்கொள்ளும் தவறான செயல்களின் மூலமே நமக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக நம் கண்களில் ஏதேனும் தூசி விழுந்துவிட்டால் உடனே நம் கண்களை கடுமையாக தேய்க்க ஆரம்பிப்போம். இப்படி கண்களை கடுமையாக தேய்ப்பதால் கண்களுக்கு தான் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இதுப்போன்று நிறைய தவறுகளை நாம் அன்றாடம் செய்து வருகிறோம்.

இங்கு நாம் அன்றாடம் நம்மை அறியாமலேயே செய்யும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் படியான தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேலாவது அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

கண்களைத் தேய்த்தல்
கண்களில் தூசி விழுந்துவிட்டது என்று கடுமையாகத் தேய்த்தால், கண்களில் அழுத்தம் அதிகரித்து, நரம்புகள் பாதிக்கப்படும், ஏன் சில நேரங்களில் விழித்திரை கிழியவும் செய்யும். அதிலும் நீங்கள் கண்களுக்கு லென்ஸ் அணிந்திருப்பவராயின், இந்த மாதிரியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், அது கண் பார்வைக்கே உலை வைத்துவிடும்.

சிறுநீரை அடக்குவது
சிறுநீர் வரும் போது அதனை அடக்காமல் வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் ஆண்குறியுடன் தொடர்புடைய குழாய்களில் அழுத்தம் அதிகம் ஏற்பட்டு, அதனால் அவைகளில் தொற்றுக்கள் ஏற்படும். எனவே சிறுநீர் வருவது போல் உணர்வு ஏற்பட்டால், சற்றும் யோசிக்காமல், அவற்றை வெளியேற்றிவிட வேண்டும்.


மூக்கை நோண்டுவது
குறிப்பாக இம்மாதிரியான செயல்களை ஆண்கள் தான் அதிகம் செய்வார்கள். பொது இடம் என்று கூட பார்க்காமல் சில ஆண்கள் இச்செயலை மேற்கொள்வார்கள். இப்படி எந்நேரமும் மூக்கை நோண்டினால், மூக்கில் காயங்கள் ஏற்பட்டு, தொற்றுகள் ஏற்படக்கூடும்.


வாயுவை அடக்குவது
வாய்வு வெளியேறுவது என்பது ஓர் இயற்கை நிகழ்வு. இதனை அடக்கினால், குடலில் அழுத்தம் அதிகரித்து, குடலில் சிறுசிறு காற்றுப்பைகள் உருவாக்கப்பட்டு, அதன் காரணமாக கடுமையான வயிற்று வலி மற்றும் அடி வயிற்று வலியை உணரக்கூடும்.

பருக்களை உடைப்பது
ஆண்களுக்கு அழகைப் பராமரிப்பதற்கு அவ்வளவு நாட்டம் காட்டமாட்டர்கள். மேலும் தங்கள் முகத்தில் பருக்கள் ஏதேனும் வந்துவிட்டால், அதனை கைகளால் உடைத்துவிடுவார்கள். ஆனால் இப்படி செய்வதால், நிலைமை இன்னும் மோசமாகத் தான் செய்யும். எப்படியெனில் இப்படி செய்யும் போது பருக்களில் இருந்த சீழ் சருமத்தின் மற்ற பகுதிகளில் படிந்து, அதனால் பருக்கள் பரவ ஆரம்பிக்கும். எனவே முதலில் இப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.


காலை உணவைத் தவிர்ப்பது
காலை உணவைத் தவிர்த்துவிட்டு அன்றைய நாளைத் தொடங்குவது என்பது, வண்டியில் பெட்ரோல் போடாமல் வண்டியை ஓட்ட நினைப்பது போன்றதாகும். காலை உணவை உண்ணாமல் இருந்தால், நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்கக்கூடும். மேலும் காலை உணவைத் தவிர்த்து வந்தால், சர்க்கரை நோய் மோசமாவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே அலுவலகத்திற்கு எவ்வளவு தாமதமானாலும், காலை உணவை தவறாமல் உட்கொள்ளுங்கள்.


மோசமான நிலையில் அமர்வது
நாள் முழுவதும் யாராலும் நேராக உட்கார முடியாது. இருப்பினும் உட்காரும் போது குனிந்த நிலையில் இருப்பதைத் தவிர்த்தால் தான், முதுகு வலி, கழுத்து வலி போன்றவை வராமல் இருக்கும். இல்லாவிட்டால், முதுகு, கழுத்து வலியுடன், உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவற்றிற்கு உள்ளாகக்கூடும்.


திடீரென்று மருந்து மாத்திரைகளை நிறுத்துவது
சிலர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருவார்கள். ஆனால் திடீரென்று அதனை நிறுத்திவிடுவார்கள். ஏன் என்று கேட்டால், நான் நன்றாக உள்ளேன் என்று சொல்வார்கள். ஆனால் அப்படி திடீரென்று மருத்துவர் சொல்லாமல் மருந்து மாத்திரைகளை நிறுத்தினால், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் எந்த மருந்தை எடுப்பதாக இருந்தாலும் சரி, நிறுத்துவதாக இருந்தாலும் சரி, மருத்துவரின் அனுமதியின்றி செய்யக்கூடாது.

அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்தஅழுத்தம் ஏற்படும்! ஆய்வில் தகவல்

அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்தஅழுத்தமும், உடல் எடையும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்டு நகரிலுள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை டாக்டர்கள், 14 முதல் 17 வயதுடைய 335 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்ததாவது: சராமரியாக வாரத்தில் 14 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்தும் 134 பேரில், 26 பேருக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46 சதவீதத்தினர் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக 25 மணி நேரம் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில், மாணவர்கள் 43 சதவீதத்தினரும், மாணவிகள் 39 சதவீதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 26 சதவீதத்தினரும், அதிகமான அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 43 சதவீதத்தினரும் அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டுள்ளதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.